திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருக பவனம் பகுதியில் ஆரோக்கியராஜ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஆரோக்கியராஜ் 17 வயது சிறுமி திருமணம் செய்து கொண்டார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசார் ஆரோக்கியராஜை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஆரோக்கியராஜுக்கு 24 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.