சென்னை மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் இருக்கும் புதிய யார்டு பகுதிக்கு தனியார் கார் நிறுவனம் தங்களுக்கு சொந்தமான 200 புதிய கார்களை நேற்று அதிகாலை கொண்டு சென்றனர். இந்நிலையில் துரைப்பாக்கம் 100 அடி சாலையில் சென்ற போது ஒரு காரில் இருந்து புகை வந்தது. இதனை பார்த்ததும் ஓட்டுநர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

சிறிது நேரத்தில் கார் முழுதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் கார் முழுவதும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.