கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே பயணிகள் நிழற்குடை இருக்கிறது. அதற்கு பின்புறம் கழிவுநீர் கால்வாயில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த வாலிபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.