கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நல்ல பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனையடுத்து பாம்பு வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்த பாம்பை காட்டுப் பகுதியில் விட்டனர்.