சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை பெரிய சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் நிரூபன் என்பவர் கட்டில், பஞ்சு மெத்தைகள் வைக்கும் குடோன் நடத்தி வருகிறார். இந்த குடோனில் மொத்தமாக கட்டில் மெத்தைகள் வங்கி இருப்பு வைக்கப்பட்டு வியாசர்பாடி, மணலி பெரம்பூர் ஆகிய பகுதிகளில் இருக்கும் அவரது கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட வியாபாரம் செய்யப்படுகிறது. நேற்று முன்தினம் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் குடோன் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குடோனில் பற்றி எரிந்த தீயை முற்றிலுமாக அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரக்கட்டில்கள், பஞ்சு மெத்தைகள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.