கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள முடியனுர் கிராமத்தில் விவசாயியான சிவராமன்(48) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உறவினரின் மகளான தனியா என்ற 8 வயது சிறுமியுடன் மாமனார் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சுப்பிரமணியபுரம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பாலத்தின் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவராமன் உயிரிழந்தார். சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.