புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான ரங்கசாமி என்பவருடன் கல் உடைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் பொம்மாடி மலை அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது காரைக்குடி நோக்கி வந்த அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.