மாவீரன் திரைப்படத்தின் கதைக்களம் குறித்து சினிமா பிரியர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023 இல் அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று மாவீரன். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருக்கும் இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம்  வெளியான நிலையில், தற்போது 45 லட்சம் பார்வையாளர்களை யூட்யூபில் கடந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து, ட்ரைலர் வாயிலாக படத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பதை சினிமா ரசிகர்கள் கணித்து அதை இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி, படத்தில் மாவீரனாக வரும் சிவகார்த்திகேயன் தினத் தீ  என்னும் நாளிதழில் கார்ட்டூனிஸ்ட்டாக பணிபுரிகிறார்.

அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை கார்ட்டூன் வாயிலாக வாசகர்களுக்கு தெரியப்படுத்தும் கதாநாயகன் அரசியல் கட்சி குறித்தும், அப்பாவி மக்கள் வாழ்விடம் பறிக்கப்பட்டு  அகற்றப்படுவது குறித்தும், கார்ட்டூன் கதையாக வெளியிட, தனது கார்ட்டூன் கதையில் வரும் பிரச்சனைகளை  நிஜ வாழ்க்கையில் கதாநாயகன் சந்திப்பது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாக இருக்கும் திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அசத்தல் சண்டை காட்சிகளும், பயந்த சுபாவம் கொண்ட கதாநாயகன் வானத்தைப் பார்த்த பின்பு கோபப்படுவது போன்ற  வித்தியாசமான கதாப்பாத்திர வடிவமைப்பும்  ஒரு புது விதமான அனுபவத்தை கொடுப்பதோடு  இந்த ஆண்டின் சிறந்த பொழுதுபோக்கு  படமாக இப்படம் இடம் பெற வாய்ப்புள்ளதாக சினிமா ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.