இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை வடஇந்தியாவில் பலபேர் பார்க்கின்றனர். இதற்கிடையில் இந்நிகழ்ச்சி சர்ச்சைகளில் சிக்கி வருகிறது.  இந்நிலையில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜாத் ஹடித் மற்றும் அகன்ஷா முத்தமிட்டு கொண்டனர்.

இதற்காக நேற்றைய எபிசோடில், சல்மான் கான் பார்வையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார். மேலும், சம்பந்தப்பட்ட இருவரிடம் “நீங்கள் இங்கே திரைப்படங்களில் நடிக்கவில்லை. உன்னை யாரும் முத்தமிடச் சொல்லவில்லை. இது மீண்டும் நடந்தால். நேரடியாக வெளியேற்றிவிடுவோம்” என்று கோபத்துடன் கண்டித்தார்.