பண்ரூட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய குபா. கிருஷ்ணன்,  நம்முடைய ஒரு எதிரி DMK, மற்றொரு எதிரி எடப்பாடி இவர்கள் இருவரையும் ஒரே நேரத்தில் நாம்மால் வீழ்த்த  முடியுமா ?  என்று சிலர் கேட்பார்கள். கம்பராமாயணத்தில் கூ,  நான் உண்மையான கம்பராமாயணத்தை சொல்லுகிறேன்…. கம்பர் எழுதிய இராமாயணத்தை சொல்கின்றேன்,  குறித்து கொள்ளுங்கள்….

கம்பராமாயணத்தில் கூட, குரங்கு படைகள் இருக்கின்றது. இலங்கைக்கு பறந்து  போக வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். நம்மால் முடியுமா ? என்று எல்லா குரங்கினங்களும் நின்று கொண்டிருக்கிறது. அப்பொழுது சாம்பவான் அங்கே இருக்கக்கூடிய அனுமனிடம் உனக்கு அந்த சக்தி இருக்கிறது. நீ போய் இலங்கையில் சென்று சீதையை பார்த்து விட்டு வா என்று சொன்னார்கள்.

அந்த சக்தி எங்கே இருக்கிறது ? என்று சொன்னால்,  ராம நாமத்தில் இருக்கின்றது. உன்னால் முடியும் என்ற எண்ணம் உனக்கு இருக்கிறது. நீ முயன்று பார்…. முயற்சி செய்…. வெற்றி பெற்று வருவாய்…. அதை தான் இன்றைக்கு நம்முடைய அண்ணனிடத்தில் கேட்டுக்கொள்கிறேன். இங்கு வந்திருப்பவர்கள் தன்னை அறிந்திருப்பவர்கள், சூழ்நிலை உணர்ந்தவர்கள், நம்முடைய அரசியல் ஆதங்கத்தை புரிந்தவர்கள். இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சி கொள்ளத்தக்க வகையிலே,  நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

அந்த நல்ல முடிவு என்பது நமக்காக அல்ல,  நாம் வணங்கும் மண்ணுக்காக… இந்த மண்ணை ஆண்ட பரம்பரையினர் தமிழர்கள். அந்த தமிழர்கள் மகிழ்ச்சி கொள்வதற்குரிய வகையிலே,  நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். நீங்க நல்ல முடிவு எடுப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.