நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க இடம் தேடி வருவதாக அமைச்சர் பெரியசாமி கூறியுள்ளார். திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், நெசவாளர்களுக்கு குறை என்றால் அதை நிவர்த்தி செய்வதில் திமுக அரசு முதலிடத்தில் இருக்கும். வீடுகள் இல்லாத கைத்தறி நெசவாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்க திட்டம் உள்ளது. விரைவில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.