சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி கூட்ஸ் செட்டில் சரக்கு ரயில் மூலம் இரும்பு தகடு உருளை கொண்டுவரப்பட்டது. இந்த இரும்பு தகடு உருளையை ஏற்றிக்கொண்டு லாரி மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை பாண்டியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வியாசர்பாடி- எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இருந்து மூலக்கடை நோக்கி லாரி வேகமாக சிக்னலில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பாண்டியன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன் மூலம் இரும்பு தகடு உருளையையும், லாரியையும் மீட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.