திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மா.மு.கோவிலூர் பிரிவு அருகே சென்ற போது காளீஸ்வரன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் வடிவேல் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த வடிவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காளீஸ்வரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.