SDPI மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய செயற்குழு உறுப்பினர் KKSM தெகலான் பார்கவி, கடல் அலைகளா அல்லது மனித தலைகளா என்று எல்லோரும் ஆச்சரியப்படுகின்ற விதத்தில் கூடல் மாநகரில் லட்சக்கணக்கில் திரண்டு இருக்கின்ற எஸ்டிபிஐ  கட்சியினுடைய இந்த மதச்சார்பின்மையை பாதுகாக்கிற இந்த மாநாட்டில் தலைமை ஏற்று  இருக்கின்ற மாநில தலைவர் நெல்லை முபாரக் அவர்களே..

எழுச்சி மிகுந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இங்கே பங்கேற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய பொதுச்செயலாளர், எளிய மக்களின் நாயகர்,  புரட்சி தமிழர், முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சியினுடைய தலைவர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்களே..

மேடையில் அமர்ந்திருக்கிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய முன்னாள் அமைச்சர் பெருமக்களே.. நிர்வாகிகளே.. எஸ்டிபிஐ கட்சியினுடைய தேசிய மாநில நிர்வாகிகளே..

பெரும் திரளாக இங்கு திரண்டிருக்கிற பெரியோர்களே.. தாய்மார்களே… இளைஞர் பெருமக்களே.. எஸ்டிபிஐ கட்சியினுடைய ஆற்றல் மிகுந்த தொண்டர்களே.. தோழர்களே அனைவருக்கும் எனது வணக்கத்தை, வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டினுடைய   மக்களுடைய கண்களும் மதுரை மாநகரை நோக்கி கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்ற மகத்தான ஒரு சரித்திரம் இங்கே படைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தை ஆளுகின்ற கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் பதைபதைப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.