தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையும், நடிகர் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகான அரசியல் நகர்வுகளும் தொடர்ச்சியாகப் பெரும் விவாதப் பொருளாக மாறி வரும் நிலையில், எக்ஸ் (X) வலைதளத்தில் இளைஞர் ஒருவர் பேசிய காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
அந்தக் காணொளியில் பேசும் இளைஞர், “இன்று தமிழ்நாடு முழுதும் கேட்கும் அரசியல் கதறல்கள் எல்லாம் விஜய் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சர் ஆகிவிட்டார் என்பதற்காக மட்டும் உருவானது அல்ல. மாறாக, சாதாரண மக்களாகிய நாம் அனைவரும் அரசியலை ஆழமாகத் தெரிந்து கொள்ளத் தொடங்கிவிட்டோம் என்பதுதான் அவர்களின் உண்மையான பயத்திற்கும் கதறலுக்கும் முக்கியக் காரணம்” என்று மிக அழுத்தமாகக் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்திற்கும் முதல்வர் விஜய்யின் ஆட்சிக்கும் மிகத் தெளிவான ஆதரவுக் கரத்தை நீட்டும் வகையிலும், அதே நேரத்தில் எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகளை நேரடியாகச் சீண்டும் வகையிலும் அமைந்திருக்கும் இந்த இளைஞரின் பேச்சு, நெட்டிசன்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இத்தனை காலம் மக்களை ஏமாற்றி அரசியல் செய்தவர்களுக்கு இனி காலம் செல்லாது என்பதை உணர்த்தும் விதமாக இந்த உரையாடல் அமைந்துள்ளதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் சொல்றது 💯 correct.
DMK, ADMK, NTK,
இவனுங்களுக்கு விஜய் அண்ணா CM ஆகிட்டாரு என்பதை விட…தமிழ்நாட்டு மக்களுக்கு அரசியல் தெரிஞ்சிடுச்சி….
இனி நம்ம நிலைமை அவ்ளோதான்…. அதுதான் இவனுங்க கதறலுக்கு முக்கிய காரணம் 🎯 pic.twitter.com/dOdy0cQinB— SUMI (@NSSumithra) August 1, 2026
தவெக தொண்டர்கள் இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், “மக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் விழிப்புணர்வே புதிய மாற்றத்திற்கான தொடக்கம்” என இணையத்தில் காரசாரமான விவாதங்கள் சுழன்றடித்து வருகின்றன.
