நீலகிரி மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6- ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஊட்டி தனியார் பள்ளியில் வைத்து கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான நீச்சல் போட்டி நடைபெற்றுள்ளது. இதனையடுத்து ஆண்களுக்கான 100 மீட்டர் போட்டியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர் கபுலேஷ் முதல் இடமும், லோகேஷ் 2- ஆம் இடமும் பெற்றனர். 3-வது இடத்தை தனியார் கல்லூரி மாணவர் ஹரி பிடித்தார். இந்நிலையில் வெற்றி பெற்ற மாணவர்களை பலர் பாராட்டியுள்ளனர்.