திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் கரிக்காத்தூர், நம்பேடு உள்ளிட்ட ஊராட்சிகளில் தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் பணி, ஏரி கால்வாய் சீரமைப்பு பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

இதனையடுத்து திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். இந்த ஆய்வின்போது ஆய்வின் போது உதவி இயக்குனர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் தேவேந்திரன், சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், இந்திராணி ஆகியோர் உடன் இருந்தனர்.