திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள செய்யாறு அடுத்த பாரசூர் காலணியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் மலைக்காலங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களும் பொது மக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த 8 ஆண்டுகளாக இது தொடர்பாக மனுக்கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கோபமடைந்தால் இந்த பகுதி மக்கள் செய்யாறு அணைக்கட்டு பாராசூட் கூட்ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.