திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டது. இதனால் வெள்ளநீர் நகர்ப்புறங்களில், கிராமப்புறங்களிலும் புகுந்து பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். அனைத்து இடங்களிலும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், அரிசி, பெட்ஷீட், டவல் என 7 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.