ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நவ்லாக் புளியங்கன்று அரசு உயர்நிலைப் பள்ளியில் ஜப்பான் ஷிட்டோராய் கராத்தே இந்தியா மற்றும் ராமர் ஷல் ஆர்ட்ஸ் யோகா பயிற்சி மையம் சார்பில் கராத்தே பெல்ட் தேர்வு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மா.சிவஞானம், பள்ளி ஒன்றிய குழு தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

இதனையடுத்து போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெல்ட் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் பழனி, ராஜேந்திரன், வெங்கடேஸ்வரன், ஜெயக்குமார், குருமூர்த்தி மாணவ மாணவிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.