விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வேலாயுதபுரம், சத்திரப்பட்டி பகுதிகளில் இருக்கும் கண்மாய்களில் கன மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் கண்மாயிலிருந்து வெளியேறும் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் ஓடையில் நிரம்பி வழிவதால் குடியிருப்பு பகுதிக்குள் மழை நீர் சூழ்ந்தது.

இதனால் வாகைகுளம் பட்டி பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் தூங்கிக் கொண்டிருந்த 80 வயது தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அதே பகுதியில் 2 வீடுகள் கனமழையால் இடிந்து சேதமானது. சேதமான வீடுகளுக்கும் மழை நீர் புகுந்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.