ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் பைனபுரம் கிராமத்திற்குள் கூட்டமாக காட்டு யானைகள் நுழைந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தற்போது யானைகள் பகல் நேரத்தில் கூட்டம் கூட்டமாக தாளவாடி மலைப்பகுதியில் உலா வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் அச்சத்தில் உள்ளனர். எனவே வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.