கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஜெகதேவி பகுதியில் கிரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அஜய், ராகவன் என்ற இரண்டு நண்பர்கள் இருந்துள்ளனர். மூன்று பேரும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் கிரி தனது நண்பர்கள் இரண்டு பேருடன் மோட்டார் சைக்கிளில் பர்கூர்- ஜெகதேவி சாலை நேருநகர் அருகே சென்றனர். அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல முயன்றனர்.

இதனால் கட்டுப்பட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஜயும், ராகவனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.