பந்தியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருமணங்கள் நின்று போன வரலாறு கூட உள்ளது. இதனிடையே சாப்பாடு ருசியாக இருந்தால் பலமுறை சாப்பிடுவார்கள். சிலர் 2 பந்தி முடிந்த பிறகும் கூட எழாமல் சாப்பிடுவார்கள். அதன்படி ஒருவர் திருமணத்தில் அமர்ந்து சாப்பிடும் வீடியோ தற்போது யூடியூப்பில் வைரலாகி வருகிறது.

அந்த நபர் நீண்ட நேரம் எழாமல் அவர் பாட்டுக்கு சாம்பார் கொண்டுவா, ரசம் கொண்டு வா என கேட்டு கேட்டு சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறார். இதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கேமரா மேன், இதென்னாப்பா நீண்டநேரமாக ஒருவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் என பார்த்து வியந்துபோனார். இதுகுறித்த வீடியோ வைரலானதை அடுத்து நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர்.