உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் தண்ணீர் அருந்தி கொண்டிருந்த மானை திடீரென்று வந்த முதலை உணவாக்க வந்த நிலையில் உயிர்தப்பிய திக் திக் காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக காட்டில் வாழும் விலங்குகளின் வாழ்க்கை என்பது அதிகமான சவால் நிறைந்ததாகவே உள்ளது.

அதிலும் அவைகளுடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சில தருணங்களில் உயிரையும் பணயம் வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் நீர்நிலை ஒன்றில் மான் ஒன்று பயத்தில் நடுங்கி தண்ணீர் அருந்தி கொண்டிருந்தது. எதிர்பாராத தருணத்தில் வந்த முதலையிடம் இருந்து மான் நொடிப் பொழுதில் உயிர் தப்பியுள்ளது. இந்த காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.