ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருட்டிபாளையம் பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் 2 கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே பிரசவத்தில் மாடு இரண்டு கன்று குட்டிகளை ஈன்ற செய்தி வேகமாக பரவியது. இதனை அறிந்த கிராம மக்கள் கன்று குட்டிகளை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.