கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அருண் தனது நண்பர்களான அரவிந்த், விஜயகுமார் ஆகியோருடன் இணைந்து சதீஷ்குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண் உள்பட 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு கோவை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி அருண், விஜயகுமார், அரவிந்த் ஆகிய மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.