திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரம் ராமநாதன் நகர் பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயதுடைய சிறுமிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் ராமராஜை கைது செய்தனர். இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகளா நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ராமராஜுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.