கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அரசு பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய், தந்தைக்கு இடையே தகராறு ஏற்பட்டதால் கோபத்தில் சிறுமியின் தாய் தனது பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றார். இதனையடுத்து 15 நாட்கள் கழித்து மீண்டும் கோவைக்கு வந்த சிறுமிகளின் தாய் கோபத்தில் தனது கணவரை பார்க்காமல் உறவினரான பெருமாள் வீட்டில் குழந்தைகளுடன் தங்கி இருந்தார். சுமார் 40 வயதான பெருமாளுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

அவர் அப்பகுதியில் இரும்பு கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த 13 வயது சிறுமிக்கு பெருமாள் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் பெருமாள் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். பின்னர் தலைமறைவாக இருக்கும் பெருமாளை தீவிரமாக தேடி வருகின்றனர்.