மதுரை மாவட்டத்திலுள்ள புது ஜெயில் ரோடு பகுதியில் போலீசார் கடந்த 2013- ஆம் ஆண்டு வாகன சோதனையில் ஈடுபட்டு அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது 25 கிலோ கஞ்சாவை பல்வேறு இடங்களில் விற்பனை செய்வதற்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உசிலம்பட்டியை சேர்ந்த சிவனம்மாள்(40), பாண்டி, ஆண்டிச்சாமி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி சின்னம்மாள், பாண்டி ஆகிய 2 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை, 1 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு நிலுவையில் இருந்த போதே ஆண்டிசாமி இறந்தது குறிப்பிடத்தக்கதாகும்.