கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்து, அதனை யாரிடமும் கூறக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கனகராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை நீதிமன்றம் கனகராஜுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் விதித்து உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமைக்கு 5 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.