கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் இந்திரா நகரில் ராமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பெரிய கொசப்பள்ளம் கிராமத்தில் வசிக்கும் அமுதா என்பவருக்கும் இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று அமுதா, மேனகா, கோமதி, பாரதி ஆகிய 4 பேரும் அரிவாள், மண்வெட்டி போன்ற ஆயுதங்களால் ராமுக்கு சொந்தமான கரும்பு பயிர்களை சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து ராமு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மேனகா, கோமதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அமுதா, பாரதியை தேடி வருகின்றனர்.