கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று முருகேசனின் தாய் பஞ்சவர்ணம், முருகேஸ்வரன் தம்பி ஒரு அறையிலும், மற்றொரு அறையில் முருகேசநும் படுத்து தூங்கி உள்ளனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் பஞ்சவர்ணம் எழுந்து பார்த்த போது மற்றொறு அறையில் முருகேசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கதறி அழுதார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகேசனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.