கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஹோட்டல் தொழிலாளியான பிரசாத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கலாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரசாத்தை கலாமணி கண்டித்தார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலிருந்த பிரசாத்தை கலாமணி கண்டித்ததாக தெரிகிறது.

இதனால் சிறிது நேரம் கழித்து வேலைக்கு செல்கிறேன் என பிரசாத் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து தனது மனைவி கடைக்கு சென்ற நேரத்தில் பிரசாத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.