கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் ரேஷ்மா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதி சேர்ந்த கௌதம்(24) என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகள். இருவரும் அப்பநாயக்கன்பட்டி புதூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனை தொடர்ந்து சட்டப்படி பதிவு அலுவலகத்தில் திருமண பதிவு செய்து கொள்ளுமாறு போலீசார் அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.