மதுரை மாவட்டத்திலுள்ள மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ராஜ்குமார்(46) மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு சித்ரா புஷ்பம்(43) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. கடந்த 23-ஆம் தேதி இந்த தம்பதியினர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். அவர்களுடன் சித்ரா புஷ்பத்தின் தாய் மாசிலா ராஜபாண்டியும்(76) வந்துள்ளார். அவர்கள் கொடைக்கானல் பேருந்து நிலையம் எதிரே அண்ணா சாலை நகராட்சி தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினர்.

அவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரும் சித்ரா புஷ்பமும் அறை கழிப்பறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். அதிகாலை கண்விழித்து பார்த்த மாசிலா ராஜபாண்டி தனது மகளும், மருமகனும் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ராஜ்குமாருக்கும் சித்ரா புஷ்பத்திற்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த தம்பதியினர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். முதலில் விஷத்தை குடித்துவிட்டு கழிப்பறைக்கு சென்று அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.