தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம் 24-ஆம் தேதி முனுசாமி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக முனுசாமியின் மீது கொதிக்கும் வெல்லப்பாகு கொட்டியது. இதனால் உடல் வெந்து வலியில் அலறி துடித்த முனுசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.