தூத்துக்குடியில் இருந்து அரசு பேருந்து புதுக்கோட்டை வழியாக ஏரலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று லிங்கபாண்டி என்பவர் ஏரலில் இருந்து தூத்துக்குடி நோக்கி பேருந்தை ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி 3-வது மைல் பாலம் அருகே சென்ற போது திடீரென வந்த மர்ம நபர் பேருந்தின் மீது கல்வீசி தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதனால் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமானது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குடி போதையில் பேருந்து மீது கல்வீசி தாக்கிய குற்றத்திற்காக மாடசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.