கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவில்விளை பகுதியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தான் வேலையில் இருந்தபோது வங்கியில் வீட்டு பராமரிப்பு கடன் வாங்கியுள்ளார். அப்போது வங்கி கூறியபடி ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ரவி 12 லட்சம் ரூபாய்க்கு வீட்டிற்கு இன்சூரன்ஸ் செய்தார்.

அதற்கான தொகையை 2016-ஆம் ஆண்டிலிருந்து மாதம்தோறும் செலுத்தி வந்துள்ளார். இன்சூரன்ஸ் காலம் 2026-ஆம் ஆண்டு வரை உள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16-ஆம் தேதி மழையால் வீடு விடிந்து விழுந்தது. இதனால் ரவி சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் சரியான பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து ரவி நாகர்கோவில் நுகர்வோர் குறைவீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி வீடு சுவர் இருந்ததற்கான இழப்பீடு தொகை 4,00,000 பணத்தை ரவி விண்ணப்பித்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி முதல் ஆறு சதவீத வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு 15000 ரூபாய் அபராதமும், வழக்கு செலவுத்தொகை 5000 ரூபாயும் நான்கு வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.