பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் சுரேஷ்-சிந்துமதி(67) தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டின் வெளிக் கதவை திறந்து வைத்துவிட்டு சிந்துமதி தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 பேர் சிந்துமதியின் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் திடுக்கிட்டு எழுந்த சிந்துமதி திருடன், திருடன் என சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஒருவரை மட்டும் பிடித்தனர்.

மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து காவல் நிலைய த்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அய்யாசாமி என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்ய போலீசார் அய்யாசாமியை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.