கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசமுத்திரம் பகுதியில் திருப்பதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா(48) என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஐந்தாம் தேதி பிரியா தனது குழந்தை நிசானுக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தனது மகனும், பேரனும் இறந்ததால் மன உளைச்சலில் இருந்த நிர்மலா எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு சென்று நிர்மலாவின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.