புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தெற்குபட்டி கிராமத்தில் வசிக்கும் பள்ளி மாணவர்களில் ஒரு தரப்பினர் பிறந்தநாள் கொண்டாடும் விதமாக ஆலங்குடி வழியாக மாங்கோட்டை செல்லும் அரசு பேருந்தில் இருக்கும் பயணிகளுக்கு இனிப்பு வழங்கியுள்ளனர். அப்போது வடக்குப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஆகாஷ்(19) என்பவரது உறவுக்கார பெண்ணிற்கு மிட்டாய் கொடுத்ததாக தெரிகிறது. அந்த பேருந்து மாலை நேரத்தில் ஆலங்குடியில் இருந்து மாங்கோட்டை வழியாக வந்து கொண்டிருந்தது.

அப்போது பேருந்தில் இருந்த பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு தரப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.