திருவாரூர் மாவட்டத்தில் தி.மு.க விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி  விவசாய தொழிலாளர் அணி நிர்வாகிகளுக்கான இந்த நேர்காணல் முகாம் மாவட்ட வாரியாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் அன்னியூர் சிவா அறிவுரையின்படி, மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன், எம்.எல்.ஏ மேற்பார்வையில் திருவாரூர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர், மாவட்ட துணை அமைப்பாளர்களுக்கான நேர்காணல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமிற்கு மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளரும் திருவாரூர் நாகை மாவட்ட நேர்காணல் பொறுப்பாளருமான ரா. சங்கர் தலைமை தாங்கி பேசியுள்ளார். இந்த முகாமில் 40-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.