நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி அவுரி திடலில் முடிவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ராணி தலைமை தாங்கியுள்ளார். இதில் மாநில செயலாளர் புள்ளியியல் சார்ந்த மாநில தலைவர் அந்துவான் சேரல், நாகை  எம்.எல்.ஏ போன்றோர் கலந்து கொண்டு பேசியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

அதாவது புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கொரோனா காலகட்டத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு மூலமாக செயல்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த ஊர்வலத்தில் 250 பெண் ஊழியர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.