புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இதில் 120-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் கபடி போட்டியில் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். முதல் பரிசாக அவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

மேலும் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், மாணவர்கள் உட்பட பலர் பாராட்டியுள்ளனர்.