ஈரோடு மாவட்டத்தில் உள்ள கரட்டடிபாளையத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரிதன்யா(17) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் மருத்துவமனையில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ரிதன்யாவிற்கு இன்ஜினியரிங் கல்லூரியில் பேஷன் டெக்னாலஜி படிக்க இடம் கிடைத்த போதும் குடும்ப சூழ்நிலை காரணமாக அவரை பெற்றோர் இன்ஜினியரிங் படிக்க வைக்கவில்லை.

கடந்த சில நாட்களாக தான் ஆசைப்பட்டதை படிக்க முடியவில்லை என மன உளைச்சலில் இருந்த ரிதன்யா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ரிதன்யா பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.