பெரம்பலூரில் வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு ஐந்தாம் தேதி மதுபான கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். வடலூர் ராமலிங்க அடிகளார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் பெரம்பலூரில் உள்ள அனைத்து மதுபான கடைகளும் பார்-களும் நாளை மூடப்பட வேண்டும். அன்றைய தினம் மதுபான விற்பனை செய்யக்கூடாது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வெங்கடப்பிரியா தெரிவித்துள்ளார்.