சேமிப்பு பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கிய இலங்கைத் தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி கல்லூரியில் படிப்பதற்கான சேர்கை ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். புதுக்கோட்டை இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்து வரும் ஷரீனா கிருஷ் மற்றும் டெனிஷா க்ரிஷ் ஆகியோர் கைபேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர்.

அவர்களின் முயற்சியை பாராட்டி கல்விக்கு பயன்படும் வகையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கையடக்க கணினிகளை வழங்கி வாழ்த்தினார். ஷரீனா கிருஷ் 468 மதிப்பெண்கள் 12-ஆம் வகுப்பில் பெற்று அசத்திய நிலையில் மருத்துவத்துறை தொடர்புடைய பாரா மெடிக்கல் பிரிவில் பிஎஸ்சி அனஸ்தீசியா பட்டப்படிப்பை படிக்க  உதவிடுமாறு மாணவியின் தாயார் முதல்வருக்கு கடிதம் மூலம் கூறியிருந்தார்.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மாணவி ஷரீனா கிருஷ்க்கு கற்பக விநாய மருத்துவ அறிவியல் கல்லூரியில் அவர் விரும்பிய பட்டப்படிப்பு படிக்கும் சேர்கை ஆணையை வழங்கினார். இந்நிகழ்வின் போது அமைச்சர் ரகுபதி, மாணவியின் குடும்பத்தினர் உடன் இருந்தனர்