தமிழக சட்டப்பேரவையில் இன்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் 4 முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. அதன்படி இலங்கை தமிழர்களுக்கு 3,859 வீடுகள் கட்டுவதற்கு 229 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் புதிய பண்ணோக்கு பிரிவு புதிதாக அமைக்கப்படும். படைவீரர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் கருணைத்தொகை இரு மடங்காக 40 லட்ச ரூபாயாக ஒதுக்கப்படும். பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் கட்டுவதற்கு 1500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.