நிலக்கரி எடுப்பு விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் “அவசர பொது முக்கியத்துவம்” வாய்ந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. திமுகவின் டிஆர்பி ராஜா (ஆளும் கட்சி), அதிமுகவின் அருண்மொழி தேவன் (எதிர்க்கட்சி) ஆகியோர் தீர்மானம் கொண்டு வருகின்றனர். இன்னும் சற்று நேரத்தில் இந்த தீர்மானத்திற்கு விளக்கம் அளித்து புதிய அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட உள்ளார்.